Home

Monday, 29 April 2013

கலக்கத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ... ( ஒரே இடத்தி ல் ஒன்று கூடிய 1 கோடி வன்னியர்)


ஏப்ரல் 25ம் தேதி மாமல்லபுரத்தில்  நடைபெற்ற வன்னியரின் சித்திரை வன்னிய இளைஞர் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 75 லட்சத்தில் இருந்து 1 கோடி  வன்னிய இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் சில கட்சியினால் தூண்டுதலின் பேரில் ஏற்பட்ட கலவரத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வாகனங்கள் திருப்பி அனுப்ப பட்டது அப்படி இருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவை 1 கோடி வன்னியர்களும் அவர்களின் குடும்பங்கள் மட்டும்தான் விழாவை கண்டு களித்தார்கள் என்று நினைத்தோம் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அ .தி.மு.க,  தி.மு.க, தே,தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்பட  அனைத்து கட்சியினரும் கண்டு அதிர்சியில் உள்ளனர். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை இதுவரை தமிழ்நாட்டை ஆண்டவர்களும் இப்போது ஆள்பவரும் கூட கூட்டியதில்லை.  தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளான அ .தி.மு.க மற்றும்  தி.மு.க வின் ஓட்டு வங்கி சுமார் 80 லட்சத்திலிருந்து 1 கோடிவரை மட்டுமே ஆனால் பா .ம.க ஒரு கோடி பேரை ஒரே இடத்தில் கூட்டி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த  1 கோடி வன்னியர்களும் வாக்கு வங்கிகளாக மாறினால் வரும் காலம் பா .ம.க கையில் உள்ளது. கலக்கத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பா .ம.க வை (அழிக்க) பழிவாங்கும் நோக்குடன் செயல் பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் இது காசு கொடுத்து சேர்த்த கூட்டமில்லை அய்யா வார்த்தைக்கு கட்டுப்பட்ட கூட்டம், இனத்தை காக்க கூடிய கூட்டம். 

விழித்திடு... ஒன்றுபடு...    

Saturday, 27 April 2013

விழித்திடு... ஒன்றுபடு...



உறங்கி கிடக்கும் வன்னிய இனமே... 
நீ அனைத்து கட்சிகளிலும் சிதறி கிடக்கின்றாய் 
உனக்கு ஏதேனும் பிரச்சனை வரும் எந்த தமிழக கட்சிகள் வந்ததுண்டா...
நமக்கு இட ஒதுக்கீடு கிடைக்க உயிர் நீத்த 21 பேருக்கு, எந்த கட்சி காரணவது  வருத்தப்பட்டதுண்டா... 
மற்ற  சமூகத்தை சேர்ந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் மரியாதையை மற்ற கட்சிகாரர்கள் இராமசாமி படையாச்சிக்கு ஒரு மாலையாவது அணிந்தது உண்டா... 
தர்மபுரி கலவரம் இதற்கும் பா.. வுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா...
இறந்து போனது தே.மு.தி. கட்சியை சேர்ந்தவர்...
கைதானவர் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்...
இறந்து போனவருக்கும் கைதனவருக்கும் மற்ற கட்சிகள் ஒரு ஆறுதல் கூட கூறவில்லை...
தற்போது மரக்காணம் பகுதியில் கலவரம் ஏற்பட்டு இரண்டு  உயிர் பலியாகியிருக்கிறது... 
தருமபுரியில் பாதிக்கப் பட்ட வெறும் கல்லுக்கும் மண்ணுக்கும் வக்காலத்து வாங்கும் தமிழக கட்சிகள் ஒரு உயிர் போனதுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
தருமபுரியில் ஏற்பட்ட கலவரத்தில் வன்னியர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்திய கருணாநிதி, கண்டும் காணமல் இருக்கும் தமிழக அரசு, கண்டு கொல்லாத தே.மு.தி. இதுதான் வன்னியர் நிலைமை
தமிழக அரசே காவல் துறையே இரண்டு உயிர்கள் பறிக்கப்பட்டதை பற்றி கூட கவலையில்லாமல் 1000க்கும் மேற்ப்பட்ட வன்னியர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறீர்களே உங்களிடம் எப்படி நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்க முடியும்? இன்னும் எத்தனை நாள் வன்னியனையே கைது செய்ய போகிறீர்கள்? வட தமிழ்நாட்டிலே அடர்த்தியாக வாழ்கிற இந்த வன்னியர்கள் கடந்த தேர்தலிலே உங்களுக்கு ஓட்டு போட்டு இங்கே பெரும்பான்மையாக வெற்றி பெற செய்தானே.. அந்த அப்பாவி வன்னிய இனத்திற்கு நீங்கள் காட்டுகிற நன்றியா இது?
.தி.மு. வை ஆள வைத்தான் வன்னியன்,தி.மு. வை ஆதரித்தான் வன்னியன் அதன் கூட்டணி ரவுடிகள் வன்னியனை கொலை செய்கிறார்கள் பெண்களை மானபங்கம் செய்கிறார்கள்.
 அவர்களின் காவல்துறை தர்மபுரி முதல் மரக்காணம் வரை வன்னிய உயிர் பிரிய காரணமான ரவுடிகளை விட்டுவிட்டு அப்பாவி வன்னியர்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள்.

ஒரு குடிசை வீடு எரிந்ததற்கு வருத்தம் தெரிவிப்பவர்கள் 
இரண்டு உயிர் போனது ஒரு பதிலும் இல்லை... 
உனக்கு ஆறுதல் கூற தமிழகத்தில் எவனும் இல்லை...  
ஆதரிப்பவரை நீ கண்டுக்கவே  இல்லை... 
மற்ற வீட்டில் நடப்பது உங்கள் வீட்டில் எப்போது வேண்டுமானாலும் நடக்கும்
நீ விழிக்கும் பொது நீ மற்றவர் காலுக்கடியி கிடப்பாய். மேலே உள்ளவர்கள் நம்மை மிதித்து கொண்டிருப்பார்கள்..
தமிழக கட்சிகளுக்கு தி.மு.., .தி.மு., தே.மு.தி.. கட்சிகளில் உள்ள வன்னியன் எப்போதும் உணர்ச்சிகள் அற்ற ஒட்டு போடும் இயந்திரம் மட்டுமே!!! 

விழித்திடு... ஒன்றுபடு... 
இல்லை என்றால் நீ மற்றும் ஒரு சுதந்திர போராட்டம்  நடத்த வேண்டிவரும்...




மரக்காணம் கலவரம் சம்பந்தமாக திராவிடம் பேசுபவருக்கு 10 கேள்விகள்? 

1. 300 கீ.மீ அப்பால் இருந்து வருபவர்களுக்கு மரக்காணம் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் பகுதி எப்படி தெரியும். .. வரும் வழியில் ஆயிரகணக்கான ஊர்களில் இப்படி எந்த சம்பவமும், சின்ன பிரச்னை கூட வரவில்லையே... 

2. மாநாட்டு வருபவர்களுக்கு எப்படி கிடைத்தது அறிவாலும், உருட்டு கட்டையும், பெட்ரோல் குண்டுகளும்...
 டீசல் வேனில் பெட்ரோல் எப்படி வரும்... ரோட்டில் லுங்கி மற்றும் அரைகால் சட்டையுடன் கையில் தடி மற்றும் ஆயுதத்ங்களுடன் உள்ளவர்கள் யார்...

3. எந்த கட்சி மாநாடுகளை நடத்தினாலும் கட்சிகாரர்கள் உற்சாகமாக வருவார்கள் அவர்களை தடுத்து சாலை மறியல் செய்தல் என்னாகும்... காவல் துறை சரியாக செயல் பட்டிருந்தால் கலவரம் தடுக்கபட்டிருக்கும்

4. கலவரம் செய்யவேண்டும் என்ற எண்ணதோடு வருபவன் மாநாட்டிற்கு போகும்போது செய்வானா அல்லது மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வரும்போது செய்வானா?
மாநாட்டிற்கு போகும்போது கலவரம் செய்தால் மாநாட்டை முடித்துவிட்டு திருப்பி அந்த வழியே வரமுடியாது பிரச்னை ஏற்படும் என்று அவனுக்கு தெரியாதா? கலவரம் பண்ணவேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளவன் போகும்போது செய்திருப்பானா?

5. மரக்காணம் பகுதியில் வீட்டை கொளுத்தினர்கள் ஆனால் ஒருவருக்கும் அடி காயங்கள் ஏதும் இல்லையே... 
எரிந்த வீட்டிற்குள் எரியாத மாடு எப்படி வந்தது.

6. பத்திரிகைகளில் வந்த 2 விதமான செய்திகள் :
தினத்தந்திதினமலர்,தினமணி:
உள்ளுர் ஆட்கள் இரண்டுபேர் சென்ற இருசக்கரவாகனம் காரில் மோதியதுபின்பு தகவல் அறிந்த உள்ளுர் விசிக கூட்டம் சாலை மறியலே கலவத்திற்கு காரணம்.
தினகரன்;
சாலையோரம் நடந்து சென்ற அப்பாவி தலித்கள்மீது வன்னியர்கள் குடித்துவிட்டு பீர்பாட்டிலை அடித்ததே கலவரத்துக்கு காரணம்.

7. பொதுமக்கள் என்றால் என்ன அர்த்தம் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆனால் செட்டியார், ரெட்டியார், நாயுடு, முதலியார், அய்யர் என யாரும் கலவரத்தில் இடுபடவில்லையே... 

8. கலவரத்தில்  பா... வை சேர்ந்த 2 பேர் உயிர் இழந்துள்ளனர், தாழ்த்தப்பட்டோர் மேல் நக கீறல்கள் கூட விழவில்லை...

9. காவல் துறை கலவரத்தில் ஈடுபட்டதாக பா... வை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்டோர் கைது, மற்றவர் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தனர்...

10. எல்லாவற்றிற்கும் ஜாதி சாயத்தை பூசாதிர்கள்தாரசு எப்போது ஒரேபக்கமாக இருக்காது... மாறும்...   


"வன்னியனை அடித்துவிட்டு வன்கொடுமை வழக்கா?

வன்னியனை  கொலைசெய்துவிட்டு வன்னியனுக்கே தண்டனையா?

இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?"




Friday, 26 April 2013

மரக்காணம் கலவரம் - வன்னியனை அடித்துவிட்டு வன்கொடுமை வழக்கா? வன்னியனை கொலைசெய்துவிட்டு வன்னியனுக்கே தண்டனையா?


மரக்காணத்தில் யாரை யார் அடித்தது?
பத்திரிகைகளில் ஊடுருவி இருக்கும் வன்னியர் எதிர்ப்புக்கூட்டம் காழ்ப்புணர்ச்சியுடன் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீது சேற்றைப் பூச முயற்சிக்கிறது...

மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவுக்கு வந்த இளைஞர்களில் இரண்டு பேர் மரக்காணம் அருகே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகளும் பத்திரிகைகளும் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர். (இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை)

அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் வன்னியர்களின் இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டது. ஆனால்,தமிழக அரசின் மூலமாகவும் நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும்  மாநாட்டைத் தடுக்க ஒரு கூட்டம் முயற்சித்தது. அத்தனைத் தடைகளையும் உடைத்து மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது.
மாபெரும் மாநாடு 
இந்த மாநாட்டிற்கு எப்படியாவது குந்தகம் விளைவிக்க வேண்டும் என்று துடித்த ஒரு கூட்டம் அதற்காக திட்டமிட்டு மரக்காணத்தில் கலவரத்தை அரங்கேற்றியது மட்டுமல்லாமல், இரட்டைப் படுகொலைகளையும் செய்து, இப்போது வன்னியர்கள் மீதே குற்றச்சாட்டை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர்.

யாரை யார் தாக்கியது?

கீழே உள்ள காணொலியில் வெளியூர்களில் இருந்த மாமல்லபுரம் நோக்கி செல்லும் வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தெளிவாக பதிவாகியுள்ளது.

அப்பாவி வன்னியர்கள் மீது தாக்குதல்


இந்தக்கலவரத்தில் அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ், குடந்தையை சேர்ந்த விவேக் ஆகிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

மரக்காணத்தில் கலவரம் ஏன் நடந்தது?

மரக்காணத்தில் வன்னியர்களுக்கு எதிரான கலவரத்தை திட்டமிட்டு நடத்தி படுகொலையும் செய்தக் கூட்டம் இப்போது கலவரத்துக்கு வன்னியர்கள்தான் காரணம் என்று கற்பனையான கட்டுக்கதைகளைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் எல்லா சாலைகளிலும் வன்னியர்கள் மாமல்லபுரம் நோக்கி வந்தனர். வன்னியர்களுக்கு கலவரம் செய்வது நோக்கமாக இருந்திருந்தால் எல்லா பகுதியிலும் கலவரம் நடந்திருக்க வேண்டும். ஆனால், மரக்காணம் தவிர வேறு எங்குமே அது போல நடக்கவில்லை.

ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நடந்த இக்கலவரத்துக்கு இரண்டு விதமான கட்டுக்கதைகளை பத்திரிகைகள் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன. (அதாவது பத்திரிகைகளில் ஊடுருவி இருக்கும் வன்னியர் எதிர்ப்புக்கூட்டம் காழ்ப்புணர்ச்சியுடன் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீது சேற்றைப் பூச முயற்சிக்கிறது)

"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு" என்பது போல, வன்னிய எதிரிகளின் பச்சைப் பொய் எட்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், அவசரத்தில் ஆளுக்கொரு பொய்யை மாற்றிச் சொல்லி அம்பலப்பட்டு நிற்கிறது சதிகாரர்கள் கூட்டம். அதனைக் கீழே காண்க:

கட்டுக்கதை 1: மாநாட்டுக்கு சென்ற வாகனம் இருசக்கர ஊர்தி மீது மோதியதே காரணம்.

மாமல்லபுரம் வன்னியர் மாநாட்டுக்கு சென்ற பேருந்து ஒன்று, இரண்டு வாலிபர்கள் சென்ற இருசக்கர ஊர்தி மீது மோதியதாம். இதனால் கலவரம் மூண்டதாம். இந்த செய்தி டெக்கன் க்ரோனிகல் மற்றும் தினத்தந்தி ஆகிய நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.

"two youths identified as Ramesh and Hariharan were going on a two-wheeler towards Marakanam when a bus carrying PMK volunteers and bound for Mamal­lapuram reportedly dash­ed against the vehicle in­j­u­ring them. As news ab­out the incident spr­e­ad, a group of people blo­cked the East Coast Road resu­lting in vehicles piling up on the arterial road"   - Police fire in air on ECR Deccan Chronicle Saturday, Apr 27, 2013 

கட்டுக்கதை 2: வன்னியர்கள் குடித்துவிட்டு பீர்பாட்டிலை அடித்ததே கலவரத்துக்கு காரணம்.

"பாமகவினர், வேன் மீது அமர்ந்து பீர் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பீர் பாட்டிலை நின்று கொண்டிருந்தவர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் பொதுமக்கள் திரண்டு சாலைக்கு வந்தனர்." என்று தி இந்து மற்றும் தினகரன் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 "the violence erupted around Thursday noon when a small group of Vanniyar Sangam members were drinking near the social forest on the side of ECR. When they were questioned, a larger group assembled immediately and entered the Kattayantheru area of the Marakkanam Colony through the forest armed with sticks and petrol bombs" - Dalits lose certificates, valuables in violence unleashed by drunken mob, The Hindu, April 27, 2013

- இப்படி ஒரே கலவரத்துக்கு இரண்டு விதமான கட்டுக்கதைகளை கட்டமைத்துள்ளனர்.

இதிலும் தி இந்து ஒருபடி மேலே போய், 'மாட்டுக்கொட்டகையைக் கூட விடவில்லை' என்று எழுதியுள்ளது. (பசுமாட்டின் மீது தி இந்துவுக்கு உள்ள பாசம் புரிந்துகொள்ளக் கூடியதுதான்)

எரிந்த கொட்டகைக்குள் ஒரு எரியாத மாடு
இதனை நிரூபிக்க 'எரிந்த கொட்டகைக்குள் ஒரு எரியாத மாட்டை படுக்க வைத்து' புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தைக் கீழே காண்க.

தேவர் ஜெயந்தியிலும் தர்மபுரியிலும் படித்த பாடம்.

தேவர் குருபூஜைக்கு சென்று வந்த அப்பாவிகளை வழிமறித்து கொலைசெய்து, ருசிகண்ட கூட்டம் இப்போது அதனை மரக்காணத்திலும் அரங்கேற்றியுள்ளது.

தர்மபுரியில் சிறிய கொட்டகைகளைப் பிரித்துப் போட்டு உள்ளே வைத்திருந்த ஏராளமான நகை பணத்தைக் காணவில்லை என்கிற கட்டுக்கதையைக் கட்டமைத்து அரசாங்கத்திடம் பணம் பறித்தது போல - இப்போது மரக்காணத்திலும் நகையைக் காணவில்லை என்று நாடகம் ஆடுகின்றனர். (அரசாங்கத்திடம் பணம் பறிக்க இப்படி ஒரு வெட்கம்கெட்ட பிழைப்பு)

"வன்னியனை அடித்துவிட்டு வன்கொடுமை வழக்கா?

வன்னியனை  கொலைசெய்துவிட்டு வன்னியனுக்கே தண்டனையா?

இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?"

Monday, 15 April 2013

நலமுடன் வாழ பாட்டி வைத்தியம்:


1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.


2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.  

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

36. முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

37. தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்