மதுவிலக்கு வேண்டி 20 ஆண்டிற்கு மேல் பாட்டாளி மக்கள் கட்சி பல போராட்டங்களை நடத்திவருகிறது. பா.ம.க வின் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம், பூரண மதுவிலக்கு வேண்டி மகளிர் போராட்டம் அதை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகளை அகற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, அதற்கு பலனாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைகளில் உள்ள 500 மது கடைகளை அகற்றும் படி அரசுக்கு உத்தரவிட்டது. சாதகமான தீர்ப்பு வந்த போதும் மருத்துவர் அய்யா பூரண மதுவிலக்கு வேண்டி பல போராட்டங்களை தொடர்ந்தார். அரசு நெருக்கடி காரணமாக மேலும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மது கடைகளை அகற்ற முடிவெடுத்துள்ளது. இது பா.ம.க விற்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த வெற்றி.
No comments:
Post a Comment