சத்தியமாக சொல்கிறேன். இனி திராவிடக் கட்சிகள் எதனுடனும் பாமக கூட்டணி வைக்காது என்று கூறியுள்ளார் பாமக இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ். தர்மபுரி மாவட்ட பாமக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசுகையில், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தை 45 ஆண்டு காலம் திராவிடக் கட்சிகள் ஆண்டது போதும். இனி பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கான புரட்சியை இங்குள்ள இளைஞர்கள்தான் செய்ய வேண்டும். திராவிட கட்சிகள் சாராயத்தையும், இலவசத்தையும் கொடுத்து நம்மை ஏமாற்றி விட்டார்கள். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக நமது இளைஞர்கள் இப்போதே தயாராக வேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை கொடுக்க மாட்டோம். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் ஆகியவற்றை இலவசமாக வழங்குவோம். எந்த காரணத்தை கொண்டும், எந்த தேர்தலிலும் பா.ம.க. இனி கூட்டணி சேராது. இது சத்தியம். குறிப்பாக திராவிட கட்சிகளுடன் நாங்கள் சேர மாட்டோம். பா.ம.க. தலைமையில் திராவிடக்கட்சிகள் அல்லாத பிற கட்சிகள் வந்தால் அந்த கட்சிகளை எங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, பல்வேறு புதிய ரயில்கள், உள்ளிட்ட பல திட்டங்களை பா.ம.க. கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற பல திட்டங்களை பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கொண்டு வரும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வருவதுதான். இதுபோன்ற நல்ல நோக்கங்களை கொண்ட பா.ம.க. ஆட்சிக்கு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர் |
Monday, 4 February 2013
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வருவதுதான்- அன்புமணி ராமதாஸ்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment