Home

Monday, 4 February 2013

டாஸ்மாக் - TASMAC எனப்படும் தமிழ் நாடு மாநிலவாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation)


டாஸ்மாக் (டாசுமாக், TASMAC) எனப்படும் தமிழ் நாடு மாநிலவாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation)  தமிழ் நாட்டில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம்தமிழ் நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறைவர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.
தமிழ்நாடு மாநிலவாணிபக் கழகம், 1983 ஆம்ஆண்டு எம். ஜி.ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) தலைமையிலான அதிமுக அரசாங்கத்தால்தமிழகத்தில் மதுவகைகளின் மொத்தவிற்பனைக்காகதொடங்கப்பட்டது. இந்தியநிறுவனச் சட்டம் - 1956 இன் படி இந்நிறுவனம் மாநில அரசின்கட்டுப்பாட்டின் கீழியங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது.தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்துவந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னைமாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரசு அரசாங்கத்தினால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது.அன்றிலிருந்து 2001 வரை, 1971-74, 1983-87, 1990-91  ஆகிய சிறு கால இடைவெளிகளைத்  தவிர  தமிழகத்தில்  மது  விற்பனை  தடை செய்யப்பட்டிருந்தது.  விஸ்கிபிராந்திரம்ஓட்காவைன்  போன்ற இந்தியாவில்  தயாரிக்கப்படும்  வெளிநாட்டு  மது வகைகளும்  கள்,  சாராயம்  போன்ற உள்நாட்டு மதுவகைகளும்  தடை  செய்யப்பட்டிருந்தன. 2001 இல்  மதுவிலக்கு  விலக்கப்பட்ட போது,மாநில அரசு  டாஸ்மாக்  நிறுவனத்தை மீண்டும்  மொத்த  விற்பனை  நிறுவனமாக  பயன்படுத்தியது.  சில்லறை  விற்பனைக்கு மதுக்கடைகள்  தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. ஆனால் பல கடைமுதலாளிகள் தங்களுக்குள் குழு அமைத்து செயல்பட்டதால் (cartelisation) கடைகள் குறைவான ஏலத்திற்குச் சென்றன. இதனால்அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை எதிர்கொள்ள 2002-03  ஆம்  நிதியாண்டில் அரசு  ஏல முறையை மாற்றியமைத்தது.  ஒரே சீரான வருவாயுள்ள மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டு பின்குலுக்கல் முறையில் பிரித்தளிக்கப்பட்டன. ஆனால் முதலாளிகள் இம்முறையை எளிதில் முறியடித்து விட்டனர். ஏலம் முடிந்தபின்பிறருக்காக விட்டுக் கொடுத்தல்பல கடைகளை முன்திட்டமிட்டபடி எவரும் ஏலம் எடுக்காமல் விடுதல் போன்றஉத்திகளைக் கையாண்டனர். எனவே மாநில அரசு சில்லறை விற்பனையையும் தானே செய்ய முன் வந்தது. அக்டோபர் 2003 இல்தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937  இல்  ஒரு திருத்தத் செய்ததன்  மூலம்  தமிழ்நாடு  மாநில  வாணிபக் கழகத்திற்கு  மதுவிற்பனையில்  மாநிலம்  முழுவதும்  ஏகபோக  உரிமையை  அளித்தது. ஜெயலலிதா  தலைமையிலான  அதிமுக  அரசால் செய்யப்ப்பட்ட  இம்மாற்றம் நவம்பர்  292003  இல்  அமலுக்கு  வந்தது.  தொடக்கத்தில் திமுக  இதை எதிர்த்தாலும்2006 ஆம்  ஆண்டு மு.கருணாநிதி  தலைமையிலான அரசு பொறுப்பேற்ற  பின்னர்தமிழ்நாடு அரசுநிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் ஏகபோக மதுவிற்பனையால் அரசுக்கு அதிகமான வருவாய் கிட்டியதால்இம்முடிவை மாற்ற விருப்பமின்றி தொடர்ந்து செயல்படுத்தி வந்தது இதனால் மது  விற்பனையில் தமிழ்நாடு  மாநில  வாணிபக் கழகத்தின்தனியுரிமை தொடர்கிறது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஒரு மாநில அரசு நிறுவனம்.தமிழ் நாடு அரசே இதன் நூறு சதவிகித உரிமையாளர். இந்நிறுவனம்அரசின் மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில்இருந்து வருகிறது. இதன் இயக்குநர் குழுமத்தில் உள்ளவர்கள்அனைவரும் இந்திய ஆட்சிப் பணி (..) அதிகாரிகள். இதன்தலைமை அலுவலகம் சென்னைஎழும்பூரில் உள்ள சென்னைபெருநகர் வளர்ச்சி குழுமக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடுமாநில வாணிபக் கழகம் ஐந்து நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னைகோவைமதுரைதிருச்சி மற்றும் சேலம் ஆகிய இவ்வைந்து மண்டலங்களும் மண்டல மேலாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்படுகின்றன. இவைமேலும் 33 வருவாய் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுஒவ்வொருமாவட்டமும் ஒரு மாவட்ட மேலாளரின் கீழ் இயங்குகின்றது.  2010  ஆம்  ஆண்டுவாக்கில்  தமிழ்நாடு மாநில  வாணிபக்  கழகத்திற்கு  தமிழகமெங்கும்  6500 மதுக்கடைகளும், 41  சேமிப்புக்  கிடங்குகளும் உள்ளன.  இந்நிறுவனத்தில் மொத்தம்  36,000  ஊழியர்கள்  பணியாற்றுகின்றனர்.  இவர்கள்  அரசு  நிறுவனத்தில் பணிபுரிந்தாலும்  ஏனைய  அரசு  ஊழியர்களுக்கு  வழங்கப்படும்  சலுகைகளும்  உரிமைகளும்  (எட்டு மணி நேர வேலை நாள்ஊதியத்துடன் விடுமுறைகள் போன்றவை) கொடுக்கப்படவில்லைமேலும் இவர்களுக்கு தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக்  கழகத்தின்  மதுக்  கடைகளுக்கு  தனிப்பெயர்கள் எதுவும் கிடையாதுமுன்பு  டாஸ்மாக்  கடை என்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டதுடன்  அவ்வாறே  அழைக்கப்பட்டன. பின்னர்  இது கோயம்புத்தூரில்  நடைபெற்ற  உலகத் தமிழ்  செம் மொழிமாநாட்டை  ஒட்டி  "தமிழ்நாடு  மாநில  வாணிபக் கழகம்" என்கிற பெயர்ப்பலகைக்கு மாற்றப்பட்டது.  இக்கடைகளில் அதிகமானகடைகளில் மது அருந்த தனி இடவசதி (பார்) செய்து தரப்பட்டுள்ளது.இந்த மது அருந்தும் இடம் மற்றும் சிறு உணவக வசதிகளை செய்துஅதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும் உரிமை தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உரிமை ஆண்டுதோறும் தனிஏலம் மூலம் விடப்படுகிறது. இக்கடைகள் பொது மக்களால் "வைன்ஷாப்" என்று பரவலாக வழங்கப்பட்டாலும் பிற மதுவகைகளும் இங்கு விற்கப்படுகின்றன.

டாஸ்மாக்கின் ஆண்டு வருவாய்
நிதியாண்டு
வருவாய்
(கோடிகளில்)
மாற்றம்
2002 - 03
2,828.09
2003 - 04
3,639
28.67%
2004 - 05
4,872
33.88%
2005 - 06
6,086.95
24.94%
2006 - 07
7,300
19.93%
2007 - 08
8,822
20.85%
2008 - 09
10,601.5
20.17%
2009 - 10
12,491
17.82%
2010 - 11
14,965
19.80%

















அரசு மதுக்கடைகளை  கையகப்படுத்தியபின்  டாஸ்மாக்கின் வருவாய்  ஆண்டுதோறும்  20 சதவிகித  அளவில் அதிகரித்து  வந்துள்ளது.  இந்நிறுவனம்  தொடங்கப்பட்ட 1983  ஆம் ஆண்டில் இதன் மொத்தவருவாய் 183 கோடிரூபாயாக இருந்தது. சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தயநிதியாண்டில் (2002-03) இதன் மொத்த வருவாய் 3499.75 கோடிகள். இதில்  அரசுக்குக்  கிட்டிய  வரி வருவாய் 2 ,828.09  கோடி. மதுக்கடைகளை  நடத்த  ஆரம்பித்த  பின்  2003-04  நிதியாண்டிற்கான  வரி  வருவாய்  3,639 கோடியாக  உயர்ந்தது.
இதில்  சுங்கவரியும்விற்பனை வரியும்  தலா  50 சதவிகிதம். நிர்வாகச்  செலவுகளையும்,  பணியாளர்  ஊதியத் தொகையையும் கழித்த  பின்னர்மிச்சமுள்ள  வரி வருவாய்  முழுக்க  அரசுக்குலாபமே.  ஏனெனில்  அரசே  மொத்த  விற்பனையாளராகவும், சில்லறை  விற்பனையாளராகவும்  உள்ளதால்இரு  விலைகளுக்கும்  உள்ள வித்தியாசம்  அரசின் கைக்கே வந்து சேர்கிறது. அடுத்த நான்கு நிதியாண்டுகளில் வரி வருவாய் முறையே 4872, 6087, 7300 மற்றும் 8822  கோடி ரூபாய்களாக  இருந்தது. 2005-06  ஆம்  நிதியாண்டில்  23 ஆண்டுகளாக  நிலைத்து  வந்த  மது  விற்பனை  வருவாய்  சாதனைமுறியடிக்கப்பட்டது.  2008-09  நிதியாண்டில்  10,601.5  கோடிகளாக  உயர்ந்து, 10,000  கோடி இலக்கு எட்டப்பட்டது. 2009-10  மற்றும்  2010-11 நிதியாண்டுகளில் வருவாய்  முறையே  12,491  மற்றும் 14,965  கோடிகளாக  இருந்தது.  மது  விற்பனையில்  80  சதவிகிதம்  விஸ்கிபிராந்திரம்,  வோத்கா  போன்ற  "ஹாட்"  மது   வகைகளும்மிச்சமுள்ள  20 சதவிகதத்தை  பீர்களும்  பிடித்துள்ளன.
வரி  வருவாயைத் தவிரபார்  உரிமங்களை  ஆண்டு தோறும் தனியாருக்கு  ஏலம்  விடுவதன்  மூலமும் அரசுக்கு  வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும்  குடிப்பழக்கமும்அவ்வப்போது  நிகழும்  மது  விலையேற்றமும்  இச்சீரான  வருவாய் வளர்ச்சிக்கு காரணங்களாகக் கருதப்படுகின்றன.

No comments:

Post a Comment